‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கொரோனா காலகட்டம் தொடங்கியதில் இருந்தே சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் வரலட்சுமி. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆதரவற்ற நாய்களுக்கு அளிப்பதற்காக 2 டன் உணவுப் பொருட்களை வழங்கிய வரலட்சுமி, கொரோனா, ஹெல்ப்லைன் குறித்த தகவல்களையும் பதிவிட்டிருந்தார்.
அதையடுத்து தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து வீடியோ ஒன்றை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இரண்டு பேர் உரையாடுவது போன்று அமைந்துள்ள அந்த வீடியோவில் வரலட்சுமியே டபுள் ஆக்சன் கொடுத்துள்ளார். அதில், ‛‛கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்களாமே. அதோடு, பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சொல்கிறார்களே? என்று ஒரு வரலட்சுமி கேட்கிறார். அதற்கு இன்னொரு வரலட்சுமி, ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் விபத்து ஏற்படாது என்பதல்ல. ஆனால் விபத்து ஏற்பட்டாலும் உயிர்பிழைத்து விடுவார்கள். அதேபோல் தடுப்பூசி போட்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் உயிர்பாதிப்பு ஏற்படாமல் அதை குணப்படுத்தி விட முடியும் என்கிறார். அதைக் கேட்டு தெளிவுபெறும் இன்னொரு வரலட்சுமி அப்படியென்றால் நாளைக்கே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன்'' என்று அவரிடத்தில் தெரிவிக்கிறார். இப்படியொரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி.