300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கொரோனா காலகட்டம் தொடங்கியதில் இருந்தே சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் வரலட்சுமி. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆதரவற்ற நாய்களுக்கு அளிப்பதற்காக 2 டன் உணவுப் பொருட்களை வழங்கிய வரலட்சுமி, கொரோனா, ஹெல்ப்லைன் குறித்த தகவல்களையும் பதிவிட்டிருந்தார்.
அதையடுத்து தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து வீடியோ ஒன்றை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இரண்டு பேர் உரையாடுவது போன்று அமைந்துள்ள அந்த வீடியோவில் வரலட்சுமியே டபுள் ஆக்சன் கொடுத்துள்ளார். அதில், ‛‛கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்களாமே. அதோடு, பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சொல்கிறார்களே? என்று ஒரு வரலட்சுமி கேட்கிறார். அதற்கு இன்னொரு வரலட்சுமி, ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் விபத்து ஏற்படாது என்பதல்ல. ஆனால் விபத்து ஏற்பட்டாலும் உயிர்பிழைத்து விடுவார்கள். அதேபோல் தடுப்பூசி போட்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் உயிர்பாதிப்பு ஏற்படாமல் அதை குணப்படுத்தி விட முடியும் என்கிறார். அதைக் கேட்டு தெளிவுபெறும் இன்னொரு வரலட்சுமி அப்படியென்றால் நாளைக்கே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன்'' என்று அவரிடத்தில் தெரிவிக்கிறார். இப்படியொரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி.