கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கொரோனா காலகட்டம் தொடங்கியதில் இருந்தே சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் வரலட்சுமி. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆதரவற்ற நாய்களுக்கு அளிப்பதற்காக 2 டன் உணவுப் பொருட்களை வழங்கிய வரலட்சுமி, கொரோனா, ஹெல்ப்லைன் குறித்த தகவல்களையும் பதிவிட்டிருந்தார்.
அதையடுத்து தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து வீடியோ ஒன்றை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இரண்டு பேர் உரையாடுவது போன்று அமைந்துள்ள அந்த வீடியோவில் வரலட்சுமியே டபுள் ஆக்சன் கொடுத்துள்ளார். அதில், ‛‛கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்களாமே. அதோடு, பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சொல்கிறார்களே? என்று ஒரு வரலட்சுமி கேட்கிறார். அதற்கு இன்னொரு வரலட்சுமி, ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் விபத்து ஏற்படாது என்பதல்ல. ஆனால் விபத்து ஏற்பட்டாலும் உயிர்பிழைத்து விடுவார்கள். அதேபோல் தடுப்பூசி போட்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் உயிர்பாதிப்பு ஏற்படாமல் அதை குணப்படுத்தி விட முடியும் என்கிறார். அதைக் கேட்டு தெளிவுபெறும் இன்னொரு வரலட்சுமி அப்படியென்றால் நாளைக்கே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன்'' என்று அவரிடத்தில் தெரிவிக்கிறார். இப்படியொரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி.