'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இரும்புத்திரைக்கு பிறகு விஷால் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்து விட்டன. அதனால் உடனடியாக ஒரு ஹிட் தேவை என்கிற கட்டத்தில் நின்று கொண்டிருக்கும் விஷால், தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
மேலும், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்து வந்த படம் துப்பறிவாளன்-2. இந்த படத்தின் பட்ஜெட்டை மிஷ்கின் அதிகப்படுத்தியதாக அவரை புகார் சொன்னதையடுத்து, இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு படமே நின்று போனது. என்றாலும், மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப்போகிறேன் என்று சொன்னபோதிலும் படப்பிடிப்பை தொடரவில்லை விஷால்.
இந்நிலையில் தற்போது எனிமி படத்தை முடித்து விட்டவர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை தொடரப் போகிறாராம். அதோடு தியேட்டர்களில் வெளியிடும் சூழல் அமையாத பட்சத்தில் ஓடிடி தளத்தில் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறாராம் விஷால்.