விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

இரும்புத்திரைக்கு பிறகு விஷால் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்து விட்டன. அதனால் உடனடியாக ஒரு ஹிட் தேவை என்கிற கட்டத்தில் நின்று கொண்டிருக்கும் விஷால், தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
மேலும், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்து வந்த படம் துப்பறிவாளன்-2. இந்த படத்தின் பட்ஜெட்டை மிஷ்கின் அதிகப்படுத்தியதாக அவரை புகார் சொன்னதையடுத்து, இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு படமே நின்று போனது. என்றாலும், மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப்போகிறேன் என்று சொன்னபோதிலும் படப்பிடிப்பை தொடரவில்லை விஷால்.
இந்நிலையில் தற்போது எனிமி படத்தை முடித்து விட்டவர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை தொடரப் போகிறாராம். அதோடு தியேட்டர்களில் வெளியிடும் சூழல் அமையாத பட்சத்தில் ஓடிடி தளத்தில் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறாராம் விஷால்.