ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் 'ராதே ஷ்யாம்'. தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் இப்படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
பிரபாஸின் அடுத்த வெளியீடாக இந்தப் படம் தான் வர உள்ளது. ஆனால், இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை படக்குழுவினர் மறுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'ராதேஷ்யாம்' படத்தைத் தியேட்டர்களில் பார்க்கும் போதுதான் அதன் விஷுவல் பிரம்மாண்டத்தை ரசிக்க முடியும். நிலைமை சரியாகும் வரை காத்திருந்து அதன் பின் படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்களாம்.
இருப்பினும் பல ஓடிடி நிறுவனங்களை பெரிய தொகை தருகிறோம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆசை காட்டி வருவதாகச் சொல்கிறார்கள்.