புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் 'ராதே ஷ்யாம்'. தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் இப்படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
பிரபாஸின் அடுத்த வெளியீடாக இந்தப் படம் தான் வர உள்ளது. ஆனால், இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை படக்குழுவினர் மறுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'ராதேஷ்யாம்' படத்தைத் தியேட்டர்களில் பார்க்கும் போதுதான் அதன் விஷுவல் பிரம்மாண்டத்தை ரசிக்க முடியும். நிலைமை சரியாகும் வரை காத்திருந்து அதன் பின் படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்களாம்.
இருப்பினும் பல ஓடிடி நிறுவனங்களை பெரிய தொகை தருகிறோம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆசை காட்டி வருவதாகச் சொல்கிறார்கள்.