பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடியவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதற்குப் பிந்தைய பாதிப்புகளால் உடல்நலம் குறைந்து செப்டம்பர் 25ம் தேதியன்று மரணம் அடைந்தார். அவரது மறைவால் கோடிக்கணக்கான ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அவரது மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அன்று அவருடைய பாடல்களைப் பற்றி பலரும் பல விதங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர் மீதான தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தினார்கள்.
அவர் மரணமடைந்த பிறகு வரும் முதல் பிறந்த நாள் இன்று. அவர் மறைந்தாலும் அவரது குரலால் வசீகரிக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் இன்று அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளை மேலும் பகிர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் மீண்டும் பதிவிட்டு வருகிறார்கள். பல சினிமா பிரபலங்களும் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
மறைந்த பின்னும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைக் கலைஞர்கள் ஒரு சிலரே. அதில் எஸ்பிபியும் ஒருவர் என்பது அவரது குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியைத் தரும் என்பது உண்மை.