ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் ரஜினி. கொரோனா பிரச்னையால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தடைப்பட்டு தடைப்பட்டு நடந்த படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தின் கடைசிநாளில் ரஜினி படக்குழு உடன் பேசியதாக ஒரு தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி பேசியதாவது : ‛‛இன்னும் சில படங்களில் நடிக்க ஆசை உள்ளது. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் அந்த எண்ணம் சாத்தியமாகும். எனது உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இவை எல்லாம் நடக்க கடவுள் தான் மனது வைக்க வேண்டும். ‛அண்ணாத்த' படம் இறுதிக்கட்டத்தை எட்டியது மகிழ்ச்சி. அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், குடும்பத்தினரையும் பாதுகாப்பாக கவனித்து கொள்ளுங்கள்'' என்றாராம்.