நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் ரஜினி. கொரோனா பிரச்னையால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தடைப்பட்டு தடைப்பட்டு நடந்த படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தின் கடைசிநாளில் ரஜினி படக்குழு உடன் பேசியதாக ஒரு தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி பேசியதாவது : ‛‛இன்னும் சில படங்களில் நடிக்க ஆசை உள்ளது. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் அந்த எண்ணம் சாத்தியமாகும். எனது உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இவை எல்லாம் நடக்க கடவுள் தான் மனது வைக்க வேண்டும். ‛அண்ணாத்த' படம் இறுதிக்கட்டத்தை எட்டியது மகிழ்ச்சி. அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், குடும்பத்தினரையும் பாதுகாப்பாக கவனித்து கொள்ளுங்கள்'' என்றாராம்.