ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் ரஜினி. கொரோனா பிரச்னையால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தடைப்பட்டு தடைப்பட்டு நடந்த படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தின் கடைசிநாளில் ரஜினி படக்குழு உடன் பேசியதாக ஒரு தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி பேசியதாவது : ‛‛இன்னும் சில படங்களில் நடிக்க ஆசை உள்ளது. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் அந்த எண்ணம் சாத்தியமாகும். எனது உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இவை எல்லாம் நடக்க கடவுள் தான் மனது வைக்க வேண்டும். ‛அண்ணாத்த' படம் இறுதிக்கட்டத்தை எட்டியது மகிழ்ச்சி. அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், குடும்பத்தினரையும் பாதுகாப்பாக கவனித்து கொள்ளுங்கள்'' என்றாராம்.