ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க உள்ளார். மோகன்ராஜா இப்படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக்கிலும், நேரடி தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். அவற்றிற்கான இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு கதை விவாதங்கள் நடந்து வருகின்றன.
அப்படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்பட ரீமேக் ஒன்றில் நடிக்க உள்ளாராம் சிரஞ்சீவி. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தை பார்த்தாராம். படம் பிடித்துப் போகவே அதை தனக்கேற்றபடி கதை அமைத்துத் தருமாறு 'சாஹோ' இயக்குனர் சுஜித்திடம் சொல்லியிருக்கிறாராம். அவரும் கதை விவாதம் நடத்தி வருவதாகத் தகவல்.
விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கைதி நம்பர் 150' மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் சிரஞ்சீவி. தற்போது இரண்டு அஜித் படங்களின் ரீமேக்கில் ஆர்வம் காட்டி வருவது ஆச்சரியம்தான்.