என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க உள்ளார். மோகன்ராஜா இப்படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக்கிலும், நேரடி தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். அவற்றிற்கான இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு கதை விவாதங்கள் நடந்து வருகின்றன.
அப்படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்பட ரீமேக் ஒன்றில் நடிக்க உள்ளாராம் சிரஞ்சீவி. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தை பார்த்தாராம். படம் பிடித்துப் போகவே அதை தனக்கேற்றபடி கதை அமைத்துத் தருமாறு 'சாஹோ' இயக்குனர் சுஜித்திடம் சொல்லியிருக்கிறாராம். அவரும் கதை விவாதம் நடத்தி வருவதாகத் தகவல்.
விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கைதி நம்பர் 150' மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் சிரஞ்சீவி. தற்போது இரண்டு அஜித் படங்களின் ரீமேக்கில் ஆர்வம் காட்டி வருவது ஆச்சரியம்தான்.