இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஹன்சிகா நடித்து முடித்துள்ள அவரது 50வது படம் மஹா. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் கடந்த 2 ஆண்டுகளாக வெளிவரவில்லை. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஜலீல் படத்துக்கு தடைகேட்டு நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தை இயக்கியதற்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தை தராமல் ஏமாற்றி விட்டனர். எனக்கு தெரியாமல் பல காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளனர். அதனால் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் படத்தின் பணிகள் முடிந்து விட்டாக இயக்குனர் ஜலீல் கூறும் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:
படத்தின் இயக்குனர் தெடர்ந்த வழக்கில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்கவில்லை. நோட்டீஸ் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டது, இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க முடிவு செய்துள்ளோம். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.