ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஹன்சிகா நடித்து முடித்துள்ள அவரது 50வது படம் மஹா. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் கடந்த 2 ஆண்டுகளாக வெளிவரவில்லை. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஜலீல் படத்துக்கு தடைகேட்டு நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தை இயக்கியதற்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தை தராமல் ஏமாற்றி விட்டனர். எனக்கு தெரியாமல் பல காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளனர். அதனால் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் படத்தின் பணிகள் முடிந்து விட்டாக இயக்குனர் ஜலீல் கூறும் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:
படத்தின் இயக்குனர் தெடர்ந்த வழக்கில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்கவில்லை. நோட்டீஸ் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டது, இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க முடிவு செய்துள்ளோம். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.