ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' |

லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் ஏற்பட்ட கிரேன் விபத்து, கொரோனா பாதிப்பு ஆகிய காரணங்களால் மீண்டும் ஆரம்பமாகாமல் இருந்தது.
ஆனால், அதற்குப் பிறகும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகாமல் இழுத்துக் கொண்டே போனது. இயக்குனர் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடர்ந்த பிறகுதான் அவர்களிருவருக்கும் இருக்கும் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.
நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இருவரும் பேசியும் தீர்வு வரவில்லை. இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடுத்து தனது சினிமா பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க கமல் முடிவெடுத்துள்ளாராம். அவர் ஏற்கெனவே 'விக்ரம்' படத்தை அறிவித்துவிட்டாலும், 'இந்தியன் 2' படத்தை முடித்துவிடுவோம் என அதற்கான பஞ்சாயத்தில் இறங்கிவிட்டதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
கமல்ஹாசனே பஞ்சாயத்தில் இறங்கிய பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய இரு தரப்பினரும் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து படத்தை மீண்டும் ஆரம்பித்து முடித்து வைக்க வேண்டும் என கமல் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
விரைவில் 'இந்தியன் 2' விவகாரம் முடிவுக்கு வரும் என்று சொல்கிறார்கள்.




