100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! |

கமலை வைத்து இந்தியன்-2 படத்தை ஆரம்பித்த இயக்குனர் ஷங்கர், தற்போது அந்தப்படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஷங்கர் படங்களில் வில்லன் கதாபாத்திரம் எப்போதுமே பவர்புல்லாக இருக்கும். அந்தவகையில் ராம்சரண் படத்தில் கன்னட ஹீரோ சுதீப்பை வில்லனாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஐ படத்தில் சுரேஷ்கோபி, 2.O படத்தில் அக்சய் குமார் என மற்ற மொழிகளில் ஹீரோக்களாக நடித்து வருபவர்களை அழைத்து வந்து வில்லனாக்கும் ஒரு சென்டிமென்ட்டை தொடர்ந்து வருகிறார் ஷங்கர். தவிர ஷங்கர் படத்தில் நடிக்க அனைத்து நடிகர்களுமே ஆர்வம் காட்டவே செய்வார்கள். அந்தவகையில் சுதீப்பும் ஷங்கர் சென்டிமென்ட்டில் சிக்குவார் என்றே தெரிகிறது.