அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போன்று வேகம் எடுத்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இயக்குனர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுப்பற்றி பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு டுவிட்டரில், ‛‛என் பெற்றோர் பாக்யராஜ் - பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எங்கள் வீட்டு பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டு தனிமையில் உள்ளோம். கடந்த 10 நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சாந்தனு நடிகராக உள்ளார்.