Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் ஏன் விலகியே இருக்கிறார்? - பிறந்த நாள் ஸ்பெஷல்!

01 மே, 2021 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Ajith-50-Birthday-special

தல என்று தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் 50வது பிறந்த நாள் இன்று. கோடிக் கணக்கான அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் எப்படி சினிமாவுக்கு வந்தார், சினிமாவில் எப்படி அவர் வளர்ந்தார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரைப்பற்றி அறியாத விஷயங்களை தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

அஜித்தை பற்றி யாரும் ஒரு குறைகூட சொல்ல முடியாது. என்றாலும் அவரை பற்றிய ஒரு குறை மட்டும் எல்லோரிடமும் உண்டு. அது அவர் பொது வெளிக்கு வருவதில்லை. மக்களை, ரசிகர்களை சந்திப்பதில்லை என்பதுதான். அது ஏன் என்பதற்கான பதில் இது.

ரசிகர் மன்றம் கலைப்பு
ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக பெரிய ரசிகர் மன்றம் அஜித்துக்கு இருந்தது. மக்களுக்கு நல்லது செய்யவும், அவர்களுக்கு உதவவும் தான் அவர் ரசிகர் மன்றம் வைக்க அனுமதி அளித்தார். ஆனால் நடந்தது வேறு. சின்ன சின்ன ஊர்களில் கூட அஜித் ரசிகர் மன்றம் தொடங்கி போர்டு வைத்துக் கொள்வதும். விஜய் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதலை கடைப்பிடிப்பதுமாய் ரசிகர்கள் இருந்தார்கள். தங்களை பிடிக்காதவர்களுடன் மோதுவதற்கான அடையாளமாக ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தார்கள்.

நகர்புறங்களில் உள்ள ரசிகர் மன்றத்தினர் ரியல் எஸ்டேட் தொழில். அரசியல்வாதிகளுடன் தொடர்பு. சங்க போஸ்டிங்கிற்கு பணம் பெறுதல் என தங்கள் போக்கை சில ரசிகர்கள் மாற்றினார்கள். தனது பெயரால் இதுபோன்ற விஷயங்கள் நடப்பதை அஜித் விரும்பவில்லை. மாறாக தனது படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் செய்யும் அலப்பறைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. அதனால் அவர் மன்றத்தை கலைத்தார்.

விழாக்களை புறக்கணிப்பது ஏன்?
அஜித் ஒரு காலத்தில் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு தான் இருந்தார். ஒரு முறை அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட அஜித் "தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த விழாவுக்கு என்னை மிரட்டி அழைத்தார்கள்" என மேடையிலேயே துணிச்சலுடன் பேசினார். இதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டினார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு அஜித் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டார் என அப்போது பேச்சுக்கள் எழுந்தன. அதற்கு விளக்கம் அளித்த அஜித் அதன்பிறகு தான் உண்மையை பேசிவிடுவதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கைவிட்டார். தவிர்க்க முடியாமல் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேர்ந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பி விடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.

பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?

அஜித் போன்று பத்திரிகையாளருக்கு நெருக்கமான நடிகர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு பத்திரிகையாளர்களை அண்ணா என்றும் பாஸ் என்றும் செல்லமாக அழைப்பார். தனது ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து வழங்கி மகிழ்வார்.

கடைசியாக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மனம் நோகும்படியாக சில சம்பவங்கள் நடந்தது. இதிலிருந்து பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்தார். என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு உதவி வந்தார். கொரோனா காலத்தில் திரைப்பட பத்திரிகையாளர் சங்கங்களுக்கு கணிசமான நிதி உதவி செய்தார்.

அஜித்தின் விளக்கம்

"என் படம் நன்றாக இருந்தால் மக்கள் பார்த்து ஆதரிப்பாளர்கள், இல்லாவிட்டால் புறக்கணிப்பார்கள். இரண்டையும் நான் சந்தித்திருக்கிறேன். என் ரசிகர்கள் என்ற போர்வையில் பெற்றவர்களை கவனிக்காமல் குடும்பத்தை பற்றி யோசிக்காமல் போஸ்டர் ஒட்டுவதையும், கொடி பிடிப்பதையும் நான் விரும்பவில்லை. எனது புகழ் வெளிச்சம் என் குடும்பத்தின் மீது விழ வேண்டாம். என் குழந்தைகள் எல்லா குழந்தைகளையும் போன்று சுந்திரமாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.

பத்திரிகையாளர்கள் என் மதிப்புக்குரியவர்கள். அவர்களையும், அவர்கள் எழுத்துக்களையும் நான் எப்போதும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். எல்லா தொழிலையும் போன்று சினிமாவில் நடிப்பதும் ஒரு தொழில் அதெற்கென்று சிறப்பு என்று எதுவும் இல்லை" என்று அஜித் தன் நிலைப்பாடு குறித்து அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறார்.

தல அஜித் உண்மையிலேயே வித்தியாசமான மனிதர்தான்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சரவணன் சூர்யாவாக மாறியது உங்களால் தான் : கே.வி.ஆனந்த் குறித்து சூர்யா உருக்கம்சரவணன் சூர்யாவாக மாறியது உங்களால் ... பெற்றோரை காப்பாற்ற உதவுங்கள் : சம்யுக்தா ஹெக்டே உருக்கமான வேண்டுகோள் பெற்றோரை காப்பாற்ற உதவுங்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Manian - Chennai,ஈரான்
02 மே, 2021 - 09:21 Report Abuse
Manian நடிப்பதே சீர்நதது என்பதை உணர்ந்த இவரு . அரசியலலே வந்தா அலறுவாங்க . இவர் பெயரை சொல்லி கொள்ளை அடிப்பானுக இவருகெடேயே அண்ன்னே குவா காசு கேப்பானுக .ஒட்டை விக்க எவனுமே இவரை ஜெயிக்க வுட மாடடானுக . அரசியல்லே காலை வைக்க புத்திசாலி மனைவியும் வுட மாட்டாங்க. அதான் அவரு ஒதுங்குதாறு . ரஜனிக்கு கொஞ்சம் நாளாச்சு . காமலு கருணா நாயுடு சகதியில் வளர்ந்த பயிரூ
Rate this:
Raj - Chennai,இந்தியா
01 மே, 2021 - 17:26 Report Abuse
Raj இவர் தான் கெத்து. கருணாநிதி முன்பே கூறினார் என்றால் என்ன தைரியம். வாழ்க வளமுடன்
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
01 மே, 2021 - 13:55 Report Abuse
திரு.திருராம் தேர்தல் முடிவுகளில் கடைசி நேர மாறுதல் நேர்வதற்க்காக அதிகாலையிலேயே கருப்பு சேப்பு சைக்கிள்ள வந்து சின்ன தொள்பதி, கருப்பு சேப்பு மாஸ்க் போட்டுகினு வந்து தலை, பேட்டி குட்து மக்கள் செல்வன் போன்றோர் எல்லாம் பிகே கிட்ட பல லகரங்கள் வாங்கிட்டதா உளவுத்துறைத் தகவல், தலையின் தலையும் இதுல உருளுது,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in