‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
கொரோனா இரண்டாவது அலை பரவுவது தெரிந்தும், பல நடிகர்கள் துணிச்சலாக தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வந்தார்கள். ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால் என சீனியர்களே படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட நிலையில் இளைஞர்கள் பற்றி சொல்லவா வேண்டும்.. அப்படி படப்பிடிப்பில் கலந்து கொண்ட மகேஷ்பாபு, ராம்சரண் ஆகியோர் தற்போது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்கள்.
ராம்சரண் தயாரித்து வரும் ஆச்சார்யா படக்குழுவில், சிரஞ்சீவியின் கேரவன் ட்ரைவராக பணியாற்றியவர், கொரோனா தாக்குதலால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ராம்சரண், சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
அதேபோல தற்போது சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வந்தார் மகேஷ்பாபு. இந்தநிலையில் தனது பர்சனல் ஒப்பனைக்கலைஞர் மற்றும் படக்குழுவினர் சிலர் கொரோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்ததும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, கொரோனா சோதனை மேற்கொண்டு தன்னுடையை குடும்பத்துடன் சேர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் மகேஷ்பாபு.