தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி, கடந்த வருடம் கொரோனா தொற்று பரவிய போதே திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் கிடைத்திட தெலுங்குத் திரையுலகத்தினரை இணைத்து செயலாற்றினார்.
கொரோனா நெருக்கடி தொண்டு அமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் உதவிகளைச் செய்ய முன்னெடுத்தார். அதன் மூலம் திரையுலகத்தினரைச் சேர்ந்த பலருக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.
தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதற்காக திரையுலகத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கொரானோ தடுப்பூசியை இலவசமாகப் போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த முயற்சிக்கு தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். “இந்த நெருக்கடியான கொரோனா பரவல் நேரத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி 45 வயதிற்கு மேற்பட்ட திரையுலகத்தினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இலவச தடுப்பூசி போடுவதாக அறிவித்துள்ளார். இந்த சமூகத்திற்காக அவர் செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.