ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி, கடந்த வருடம் கொரோனா தொற்று பரவிய போதே திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் கிடைத்திட தெலுங்குத் திரையுலகத்தினரை இணைத்து செயலாற்றினார்.
கொரோனா நெருக்கடி தொண்டு அமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் உதவிகளைச் செய்ய முன்னெடுத்தார். அதன் மூலம் திரையுலகத்தினரைச் சேர்ந்த பலருக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.
தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதற்காக திரையுலகத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கொரானோ தடுப்பூசியை இலவசமாகப் போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த முயற்சிக்கு தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். “இந்த நெருக்கடியான கொரோனா பரவல் நேரத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி 45 வயதிற்கு மேற்பட்ட திரையுலகத்தினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இலவச தடுப்பூசி போடுவதாக அறிவித்துள்ளார். இந்த சமூகத்திற்காக அவர் செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.