ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வழக்கு எண் 18, ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும் முழுமையாக சினிமாவை விடவில்லை. நல்ல படங்கள் வந்தால் நடிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் கொரோனாவால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் உள்ளேன், ஆனால் சீக்கிரம் குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைக்கு மோசமாக இல்லை. லேசாக மூச்சுத்திணறல் மட்டும் உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை பெறுகிறேன். இந்த நோயை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என பதிவிட்டுள்ளார் மனிஷா.