நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தென்னிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். தற்போது 'ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமா பிரபலங்கள் பலருக்கும், கலைஞர்களுக்கும் கொரோனா தொற்று அடுத்தடுத்து பரவி வருகிறது. பலரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் பிரபாஸின் தனிப்பட்ட மேக்கப் கலைஞர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம் பிரபாஸ்.
அதனால் அவர் நடிக்க வேண்டிய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் அடுத்து 'ராதே ஷ்யாம்' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் நடிக்க வேண்டுமாம். அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியில் வந்த பிறகே படப்பிடிப்பைப் பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.
தெலுங்கில் ஏற்கெனவே சில முக்கிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.