ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர், இப்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். சீக்கிரம் இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவேன்'' என தெரிவித்துள்ளார் அதர்வா.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மாதவன், அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




