20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். தமிழில் மட்டுமே அதிகப் படங்களை இயக்கியுள்ளார். அவருக்கும் பான்-இந்தியா அளவில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
தமிழில் தற்போது அவர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படம் அப்படியே நின்றிருந்தாலும், அதைத் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தியில் அடுத்தடுத்து படங்களை இயக்கப் போய்விட்டார்.
அவர் தமிழில் இயக்கிய 'அந்நியன்' படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க ரீமேக் செய்ய உள்ளார். அப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தமிழில் அப்படத்தைத் தயாரித்த ஆஸ்கர் நிறுவனம் படத்தின் கதை உரிமை தங்கள் வசம்தான் இருக்கிறது, ஷங்கர் அதே கதையை ஹிந்தியில் ரீமேக் செய்யக் கூடாது என்றது. ஆனால், கதையை எழுதியது தான்தான் உரிமை தன்னிடமே உள்ளது என தயாரிப்பு நிறுவனத்திற்கு ஷங்கர் பதிலளித்தார்.
அது பற்றிய சர்ச்சை இன்னும் தொடர்ந்தாலும் 'அந்நியன்' ஹிந்தி பட ரீமேக் வேலைகளை ஷங்கர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறாராம். தற்போது படத்தின் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானியுடன் பேசி வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2022ம் ஆண்டில்தான் இந்தப் படம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாக உள்ளது என்றாலும் அடுத்து ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஹிந்திப் பட ஆரம்பக் கட்ட வேலைகளை முடித்துவிட ஷங்கர் தீர்மானித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.