பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் |
முன்னணி நடிகரான பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்க நீ, நான் என பட நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. இருந்தாலும் தனக்கென பவன் கல்யாண் கிரியேடிவ் ஒர்க்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இரண்டு படங்களையும் தயாரித்தார் பவன் கல்யாண். திறமையுள்ளவர்களை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த நிறுவனத்தை துவங்கிய அவர், 2018-க்கு பிறகு படத்தயாரிப்பில் இறங்கவில்லை.
இந்தநிலையில் தற்போது பீப்பிள் மீடியா பேக்டரி என்கிற நிறுவனத்துடன் இணைந்து 15 படங்களை தயாரிக்க உள்ளார் பவன் கல்யாண். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இளைஞர்களின் மனதில் உதிக்கும் உண்மையான படைப்புகளை சினிமாவில் கொண்டுவருவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் தான், தாங்கள் இருவரும் இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.