விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
முன்னணி நடிகரான பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்க நீ, நான் என பட நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. இருந்தாலும் தனக்கென பவன் கல்யாண் கிரியேடிவ் ஒர்க்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இரண்டு படங்களையும் தயாரித்தார் பவன் கல்யாண். திறமையுள்ளவர்களை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த நிறுவனத்தை துவங்கிய அவர், 2018-க்கு பிறகு படத்தயாரிப்பில் இறங்கவில்லை.
இந்தநிலையில் தற்போது பீப்பிள் மீடியா பேக்டரி என்கிற நிறுவனத்துடன் இணைந்து 15 படங்களை தயாரிக்க உள்ளார் பவன் கல்யாண். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இளைஞர்களின் மனதில் உதிக்கும் உண்மையான படைப்புகளை சினிமாவில் கொண்டுவருவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் தான், தாங்கள் இருவரும் இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.