இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் இயக்குனரானவர் பாக்யராஜ் கண்ணன். அதையடுத்து கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு என பலர் நடித்துள்ள சுல்தான் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இன்று திரைக்கு வந்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி இன்று அதிகாலை சென்னை பாடியில் உள்ள கிரீன் திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது கார்த்தியும் ரசிகர்களோடு அமர்ந்து சுல்தான் படத்தை பார்த்து ரசித்தார்.
இந்த நிலையில் சுல்தான் படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள். சுல்தான் படம் ரெமோவை விட பெரிய அளவில் வெற்றி பெறட்டும். கார்த்தி, ராஷ்மிகா, தயாரிப்பாளர் பிரபு ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.