பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? |
'நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களைத் தொடர்ந்து மீண்டும் அஜித், இயக்குனர் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'வலிமை' படத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டி உள்ளது. தேர்தலுக்குப் பின் ஸ்பெயின் நாட்டில் அந்த படப்பிடிப்பு நடக்கலாம்.
இதனிடையே, இதுவரை எடுத்த 'வலிமை' படக் காட்சிகளை படக்குழுவினர் போட்டு பார்த்திருக்கிறார்கள். படம் வேற லெவலில் இருப்பதாகவும், சாதாரண ரசிகர்களுக்கு இப்படம் புரியுமா என்ற சந்தேகமும் வந்ததாகவும் சொல்கிறார்கள். அதனால், சில காட்சிகளை திருத்தவும் முடிவு செய்துள்ளார்களாம். இருந்தாலும் படத்தைப் பார்த்த அஜித், மீண்டும் வினோத் உடன் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளாராம். அந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கப் போகிறாராம்.
'நேர்கொண்ட பார்வை, வலிமை' இரண்டு படங்களின் சம்பளம், வியாபார விவகாரம் ஆகிய கணக்குகளில் கொஞ்சம் முன்னே, பின்னே இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். அந்தப் படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக மட்டுமே எடுக்க வேண்டும் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.