ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

'நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களைத் தொடர்ந்து மீண்டும் அஜித், இயக்குனர் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'வலிமை' படத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டி உள்ளது. தேர்தலுக்குப் பின் ஸ்பெயின் நாட்டில் அந்த படப்பிடிப்பு நடக்கலாம்.
இதனிடையே, இதுவரை எடுத்த 'வலிமை' படக் காட்சிகளை படக்குழுவினர் போட்டு பார்த்திருக்கிறார்கள். படம் வேற லெவலில் இருப்பதாகவும், சாதாரண ரசிகர்களுக்கு இப்படம் புரியுமா என்ற சந்தேகமும் வந்ததாகவும் சொல்கிறார்கள். அதனால், சில காட்சிகளை திருத்தவும் முடிவு செய்துள்ளார்களாம். இருந்தாலும் படத்தைப் பார்த்த அஜித், மீண்டும் வினோத் உடன் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளாராம். அந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கப் போகிறாராம்.
'நேர்கொண்ட பார்வை, வலிமை' இரண்டு படங்களின் சம்பளம், வியாபார விவகாரம் ஆகிய கணக்குகளில் கொஞ்சம் முன்னே, பின்னே இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். அந்தப் படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக மட்டுமே எடுக்க வேண்டும் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.