ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
'நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களைத் தொடர்ந்து மீண்டும் அஜித், இயக்குனர் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'வலிமை' படத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டி உள்ளது. தேர்தலுக்குப் பின் ஸ்பெயின் நாட்டில் அந்த படப்பிடிப்பு நடக்கலாம்.
இதனிடையே, இதுவரை எடுத்த 'வலிமை' படக் காட்சிகளை படக்குழுவினர் போட்டு பார்த்திருக்கிறார்கள். படம் வேற லெவலில் இருப்பதாகவும், சாதாரண ரசிகர்களுக்கு இப்படம் புரியுமா என்ற சந்தேகமும் வந்ததாகவும் சொல்கிறார்கள். அதனால், சில காட்சிகளை திருத்தவும் முடிவு செய்துள்ளார்களாம். இருந்தாலும் படத்தைப் பார்த்த அஜித், மீண்டும் வினோத் உடன் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளாராம். அந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கப் போகிறாராம்.
'நேர்கொண்ட பார்வை, வலிமை' இரண்டு படங்களின் சம்பளம், வியாபார விவகாரம் ஆகிய கணக்குகளில் கொஞ்சம் முன்னே, பின்னே இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். அந்தப் படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக மட்டுமே எடுக்க வேண்டும் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.