பெயரை மாற்றிய நடிகர் ஹம்சவர்தன்; 2 படங்களிலும் 'கமிட்' ஆனார் | பிளாஷ்பேக்: ஒரே இரவில் கதை எழுதி உருவாக்கப்பட்ட “ஓர் இரவு” திரைப்படம் | 'வணங்கான்' படத்தில் 'மிஸ்' ஆன வாய்ப்பு, இப்போது சூர்யா 46ல்… | விஷால், சாய் தன்ஷிகா வயது வித்தியாசத்தை ஆராயும் ரசிகர்கள்!! | ராஜமவுலி பாராட்டும், 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனரின் மகிழ்ச்சியும் | என்னாச்சு கேர்ள் பிரண்டுக்கு? : ரசிகர்களை அமைதிப்படுத்திய ராஷ்மிகா | கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டி அசத்திய கன்னட நடிகை | ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர் பட ரீ ரிலீஸில் அதிர்ச்சி : பாதியில் வெளியேறிய ரசிகர்கள் | மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி : விஜய் சேதுபதி | தொடரும் பட இயக்குனரை வீட்டுக்கே வரவழைத்து பாராட்டிய சூர்யா, கார்த்தி |
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே போடுகிறார்கள். பல அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து தடுப்பூசியைப் போட்டு வருகிறார்கள். அது போலவே சினிமா பிரபலங்களும் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
80களின் முன்னணி கதாநாயகிகளான அம்பிகா, சுஹாசினி இருவரும் இன்று கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டனர்.
மக்களும் எந்தவிதமான பயம் இல்லாமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களிடம் அறிவுறுத்திக் கொண்டு வருகிறது.
இப்படி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் போட்டுக் கொள்ளும் போது மக்களும் முன்வந்து போட்டுக் கொள்வார்கள். தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை இரண்டு நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.