தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே போடுகிறார்கள். பல அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து தடுப்பூசியைப் போட்டு வருகிறார்கள். அது போலவே சினிமா பிரபலங்களும் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
80களின் முன்னணி கதாநாயகிகளான அம்பிகா, சுஹாசினி இருவரும் இன்று கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டனர்.
மக்களும் எந்தவிதமான பயம் இல்லாமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களிடம் அறிவுறுத்திக் கொண்டு வருகிறது.
இப்படி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் போட்டுக் கொள்ளும் போது மக்களும் முன்வந்து போட்டுக் கொள்வார்கள். தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை இரண்டு நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.