விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே போடுகிறார்கள். பல அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து தடுப்பூசியைப் போட்டு வருகிறார்கள். அது போலவே சினிமா பிரபலங்களும் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
80களின் முன்னணி கதாநாயகிகளான அம்பிகா, சுஹாசினி இருவரும் இன்று கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டனர்.
மக்களும் எந்தவிதமான பயம் இல்லாமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களிடம் அறிவுறுத்திக் கொண்டு வருகிறது.
இப்படி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் போட்டுக் கொள்ளும் போது மக்களும் முன்வந்து போட்டுக் கொள்வார்கள். தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை இரண்டு நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.