பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கியவர் என்று பேசப்பட்டவர் பிரவுதேவா. நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா 1994ல் வெளிவந்த 'இந்து' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இத்தனை வருடங்களாகவும் நாயகனாக நடித்துக் கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனாலும், அவர் நடித்துள்ள மூன்று படங்கள் எப்போது வெளியாகும் என தடுமாறி நின்று கொண்டிருக்கின்றன.
ஹிந்தியில் முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் இயக்குனராக இருந்தாலும் ஒரு நடிகராக தன்னுடைய படங்கள் உரிய காலத்தில் வெளியாக வேண்டும் என்பது அவருக்குத் தெரியாதா?.
அவர் நடித்து முடித்துள்ள 'யங் மங் சங்' படத்தின் டைட்டில் அறிமுகம் 2019ல் வெளியானது. அதற்குப் பிறகு படம் பற்றிய எந்த அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அடுத்து 'பொன்மாணிக்கவேல்' என்ற படத்தின் டீசர் 2019ம் ஆண்டிலும் டிரைலர் 2020ம் ஆண்டிலும் வெளியானது. மற்றொரு படமான 'தேள்' என்ற படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிவடைந்து அப்படியே நிற்கிறது.
இந்த மூன்று படங்கள் அல்லாமல் 'பாகீரா, ஊமை விழிகள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. எத்தனையோ படங்கள் வெளிவராமல் தவிப்பதற்கும் முன்னணி நடிகர், இயக்குனரான பிரபுதேவாவின் படங்கள் தவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.