இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ்த் திரையுலகம் ஒரு மோசமான கால கட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இதே நாளில்தான் தியேட்டர்களை மூடினார்கள். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை.
ஜனவரி மாதம் வெளியான 'மாஸ்டர்' படம் நன்றாகவும், பிப்ரவரி மாதத்தில் வெளியான 'களத்தில் சந்திப்போம், பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள் ஓரளவிற்கும் தாக்குப் பிடித்து ஓடியிருக்கின்றன. இந்த மாதம் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' முதல் சில நாட்கள் நன்றாக ஓடியிருக்கிறது. இவற்றைத் தவிர வேறு எந்த படங்களும் குறிப்பிடும்படி ஓடவில்லை.
இதனிடையே, மக்கள் தியேட்டர்கள் பக்கம் வராத காரணத்தால் பல தியேட்டர்களை கடந்த சில வாரங்களாக மூடி வைத்திருக்கிறார்கள். சில தியேட்டர்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காட்சிகள் மட்டுமே நடக்கின்றன. இந்நிலை இப்படியே தொடர்வதால் நாளுக்கு நாள் மூடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ளவில்லை என்றால் தியேட்டர்களை மூட உத்தரவிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மக்கள் வராத காரணத்தால் அவர்களாகவே தியேட்டர்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வேறு நாளுக்கு நாள் பரவி வருவதால் மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்த்து வருகிறார்கள் என்பதே உண்மை. இந்நிலை நீடித்தால் அடுத்த மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள சில பெரிய படங்களின் வெளியீட்டைக் கூட தள்ளி வைப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்.