எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
துல்கர் சல்மான் மலையாளத்தில் தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான், இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு சல்யூட் என டைட்டில் வைத்து சமீபத்தில் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.
இந்தநிலையில் தற்போது துல்கர் சல்மானின் போலீஸ் கெட்டப்பில் செகன்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப்படத்தில் அரவிந்த் கருணாகரன் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பதையும் அறிவித்துள்ளனர். இந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார் துல்கர் சல்மான்..