'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கதாநாயகி, வில்லி, கேரக்டர் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது பிரபலமாகி உள்ளார் அதோடு, பெண்களுக்கு உதவி செய்யும் சேவ்சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி தனது 36ஆவது பிறந்த நாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார் வரலட்சுமி. அதையடுத்து மீடியாக்களை சந்தித்தவர், சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் எனது பிறந்த நாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். பின்னர் மீடியாக்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டபோது, திருமணம் குறித்த ஒரு கேள்வியும் அவர் முன்பு வைக்கப்பட்டது. மற்ற கேள்விகளுக்கெல்லாம் சிரித்துக் கொண்டே பதிலளித்த வரலட்சுமி, அந்த கேள்வியை கேட்டதும் செம கோபமாகி விட்டார்.
''பெண்கள் என்றாலே கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் உள்ளதா? ஆண்களைப் போன்று எங்களைப் போன்ற பெண்களுக்கும் வாழ்க்கையில் கொள்கைகள் இருக்கக்கூடாதா? எப்போது சந்தித்தாலும் திருமணம் எப்போது? என்று கேட்கும் கேவலமான கேள்வியை இனிமேலும் என்னிடத்தில் கேட்காதீர்கள்'' என்று காட்டமாக பதிலளித்தார் வரலட்சுமி.