வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. அவருடன் கல்யாணி பிரியதர்ஷன், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாநாடு படம் எப்போது திரைக்கு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதுகுறித்து டைரக்டர் வெங்கட் பிரபு கூறுகையில், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டியுள்ளது. அப்போது எடுக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மாநாடு ரிலீஸ் தேதியை உறுதி செய்து அறிவித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.




