இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. அவருடன் கல்யாணி பிரியதர்ஷன், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாநாடு படம் எப்போது திரைக்கு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதுகுறித்து டைரக்டர் வெங்கட் பிரபு கூறுகையில், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டியுள்ளது. அப்போது எடுக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மாநாடு ரிலீஸ் தேதியை உறுதி செய்து அறிவித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.