இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கும்கி படத்திற்கு பிறகு மீண்டும் யானையை மையமாகக் கொண்ட கதையில் பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் காடன். தமிழ், தெலுங்கு. ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாகுபலி வில்லன் ராணா நாயகனாக நடிக்க, விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யானைகளின் வீடான காட்டை அழித்து மனிதர்கள் கட்டிடங்கள் கட்டுவதும், யானைகளின் காட்டை பாதுகாக்க ராணா கடுமையாக போராடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியாக இருப்பதாக அப்போதே படக்குழு அறிவித்திருந்தது. அதையடுத்து கொரோனா தொற்று காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் மார்ச் 26-ந்தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காடன் டிரைலர் மூன்றே நாட்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்திருக்கிறது.