மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கும்கி படத்திற்கு பிறகு மீண்டும் யானையை மையமாகக் கொண்ட கதையில் பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் காடன். தமிழ், தெலுங்கு. ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாகுபலி வில்லன் ராணா நாயகனாக நடிக்க, விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யானைகளின் வீடான காட்டை அழித்து மனிதர்கள் கட்டிடங்கள் கட்டுவதும், யானைகளின் காட்டை பாதுகாக்க ராணா கடுமையாக போராடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியாக இருப்பதாக அப்போதே படக்குழு அறிவித்திருந்தது. அதையடுத்து கொரோனா தொற்று காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் மார்ச் 26-ந்தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காடன் டிரைலர் மூன்றே நாட்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்திருக்கிறது.




