கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
சினிமாவில் சண்டை, மோதல் என்பது சிறிய அளவில் நடப்பது வழக்கம். அதற்கு முழு காரணமாக பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களது 'ஈகோ' தான் இருக்கும். ஆனால், சமீபத்தில் படத்தை இயக்கிய ஒரு இயக்குனரையே புறக்கணித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற படத்தை இயக்கியுள்ளவர் வெங்கட கிருஷ்ண ரோகந்த்.
இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், படத்தின் இயக்குனருக்குத் தெரியாமலேயே அந்த டீசரை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். மேலும், யூ டியுபில் வெளியாகும் டீசர், டிரைலர்களில் அந்த இயக்குனரின் பெயர் தலைப்பில் இடம் பெறுவது வழக்கம். அவரது பெயரைக் கூட அப்படி இடம் பெற வைக்காமல், மற்ற கலைஞர்கள் பெயருடன் சேர்த்தே இடம் பெற வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து படத்தின் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் அவரது முகப்புத்தகத்தில், “அன்பார்ந்த face book நண்பர்களுக்கு... மன்னிக்கவும்... இது வரை நான் இயக்கிய, விஜய் சேதுபதி நடித்த #யாதும்ஊரேயாவரும்கேளிர் #YaadhumOoreYaavarumKelir படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன்.
இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம், நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியாமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும்
நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மவுனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
தனது படத்தின் இயக்குனருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது இயக்குனர்களை மதிக்கும் விஜய் சேதுபதிக்குத் தெரியுமா, தெரியாதா என்று திரையுலகத்தில் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி தலையிடுவாரா என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.