என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கடந்த ஒரு வாரமாகவே தெலுங்கு திரையுலகின் ஹாட் டாபிக்கே உப்பென்னா படத்தின் வெற்றிதான். படத்தின் நாயகன் வைஷ்ணவ் தேஜ் மற்றும் நாயகி கீர்த்தி ஷெட்டி ஆகியோர் புதியவர்கள் என்றாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய்சேதுபதி படத்திற்கு மாஸ் அப்பீல் கொடுத்தார். அதேசமயம் இந்தப்படத்தை அனைத்து கமர்ஷியல் படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் புஜ்ஜிபாபு.
ஒரு வாரத்திலே இந்தப்படத்தின் வசூல் 70 கோடியை தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வரும் இந்தப்படத்தை சமீபத்தில் நடிகர் பாலகிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். படம் முடிந்ததும் இயக்குனர் புஜிபாபுவை மனதாரா பாராட்டியும் உள்ளார் பாலகிருஷ்ணா.