அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.
இந்தக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமாகியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் பணிபுரிவது குறித்து சமந்தா மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். அது பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது : “வலிமையான விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களுடன் இணைந்து நடிப்பது எவ்வளவு சந்தோஷமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் என நிச்சயமாகச் சொல்வேன். இந்தப் பார்ட்டியை அசத்திக் கொண்டிருக்கிறீர்கள் விக்னேஷ் சிவன்,” என பாராட்டித் தள்ளுகிறார் சமந்தா.