விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் |
சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சலார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரை அடுத்த கோலார் தங்கவயலில் நடத்த திட்டமிட்டனர். அதற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கவில்லை.
இதனால் படப்பிடிப்பை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோதாவரிகணியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலும், அதை சுற்றியுள்ள காடுகளிலும் படப்பிடிப்பபை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதி நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். நக்சலைட்டுகள் அச்சுறுத்தலால் இங்கு இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்ததில்லை.
தற்போது சலார் படத்தின் படப்பிடிப்புக்கு நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கானா காடுகளை வணிக நோக்கத்திற்காக எடுக்கப்படும் சினிமாவுக்கு பயன்படுத்த அனுமதிக் க மாட்டோம். வெளியேறுங்கள் என நக்சலைட்டுகள் படத் தயாரிப்பு தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து பிரபாஸ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் ராமகுண்டம் நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு கேட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் 40 ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.