கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் | ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை | ராதிகாவை கிழவியாக மாற்றிய வினீஷ் | துபாயில் அஜித் பாதுகாப்பாக இருக்கிறார்: மேலாளர் தகவல் |

மற்றொரு நடிகையைப் பார்த்து பிரபல நடிகை எடுத்த முடிவு புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகி விட்டது. பொதுவாகவே திருமணமாகி விட்டால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய் விடும். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கிலும் திருமணத்திற்குப் பிறகு பிஸியாக நடித்து வருகிறார் திருமணமான நடிகை. இவரைப் பார்த்து பிரபல நடிகை ஒருவர் தானும் இதே போல் திருமணத்திற்குப் பிறகும் நடிக்கலாம் என ஆசைப்பட்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கிறதாம். ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுத்தால், புதுப்படம் எதுவும் இல்லையாம். நடிகைக்கு படவாய்ப்புகள் குறைந்ததற்கு திருமணம் மட்டுமல்ல, அவர் அதிகமாகக் கேட்கும் சம்பளமும் தான் காரணம் என்கிறார்கள் திரைவட்டத்தில்.




