இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கொரோனா பிரச்சினையில் இருந்து உலகம் இன்னமும் மீண்ட பாடில்லை. கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், இப்பிரச்சினை எப்போது தீரும் என்றும் தெரியவில்லை. இதனால் மற்ற துறைகளைப் போலவே திரைத் துறையும் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்தது தான்.
அதிலும் குறிப்பாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தான் அதிக பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறதாம். கொரோனா பயத்தால் பலர் படப்பிடிப்புக்கு வரத் தயக்கம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் பிரமாண்ட படமொன்றில் நடித்து வரும் நாயகனும் இப்போதைக்கு படப்பிடிப்பிற்கு வரமுடியாது எனத் தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே மற்றொரு களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் அவர், தேவையில்லாமல் படப்பிடிப்புகளுக்குச் சென்று உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னெச்சரிக்கையாக இப்படி முடிவெடுத்து விட்டார் போலும்.
ஆனால் இயக்குநர் அப்படியில்லை. இந்தப் படத்தால் வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியாமல் தவித்து வந்தார். அதனால்தான் நாயகன் இல்லாமல் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க தயாரிப்பு முடிவு செய்து விட்டதாம்.