விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
கொரோனா பிரச்சினையில் இருந்து உலகம் இன்னமும் மீண்ட பாடில்லை. கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், இப்பிரச்சினை எப்போது தீரும் என்றும் தெரியவில்லை. இதனால் மற்ற துறைகளைப் போலவே திரைத் துறையும் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்தது தான்.
அதிலும் குறிப்பாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தான் அதிக பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறதாம். கொரோனா பயத்தால் பலர் படப்பிடிப்புக்கு வரத் தயக்கம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் பிரமாண்ட படமொன்றில் நடித்து வரும் நாயகனும் இப்போதைக்கு படப்பிடிப்பிற்கு வரமுடியாது எனத் தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே மற்றொரு களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் அவர், தேவையில்லாமல் படப்பிடிப்புகளுக்குச் சென்று உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னெச்சரிக்கையாக இப்படி முடிவெடுத்து விட்டார் போலும்.
ஆனால் இயக்குநர் அப்படியில்லை. இந்தப் படத்தால் வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியாமல் தவித்து வந்தார். அதனால்தான் நாயகன் இல்லாமல் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க தயாரிப்பு முடிவு செய்து விட்டதாம்.