எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

குடும்பமாக பார்க்கலாம் என்ற கேரண்டி தரக்கூடிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இந்த இயக்குநரும், நடிகருமானவர். திடீரென இவர் பெரிய முதலாளி வீட்டிற்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் வெளியில் வந்ததால் தப்பித்துக் கொண்டார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவர், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் தமிழின் முன்னணி நாயகன் ஒருவரை இயக்குவதாக இருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவரது படத்தை இயக்குவார் எனப் பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப் போகும் நிலையில், இன்னமும் அந்தக் குறிப்பிட்ட படம் பற்றிய அப்டேட் வராமல் இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பட வேலைகள் தாமதம் ஆவதற்கு கொரோனா மட்டுமல்ல, நாயகன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. நாயகன், வில்லன் என தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வரும் மக்களுக்குப் பிடித்தமான அந்த நடிகர், இந்தப் படத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம். அடுத்தாண்டாவது இவர்கள் இணைந்து படம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என இவர்களது காம்போவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.