இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
குடும்பமாக பார்க்கலாம் என்ற கேரண்டி தரக்கூடிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இந்த இயக்குநரும், நடிகருமானவர். திடீரென இவர் பெரிய முதலாளி வீட்டிற்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் வெளியில் வந்ததால் தப்பித்துக் கொண்டார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவர், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் தமிழின் முன்னணி நாயகன் ஒருவரை இயக்குவதாக இருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவரது படத்தை இயக்குவார் எனப் பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப் போகும் நிலையில், இன்னமும் அந்தக் குறிப்பிட்ட படம் பற்றிய அப்டேட் வராமல் இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பட வேலைகள் தாமதம் ஆவதற்கு கொரோனா மட்டுமல்ல, நாயகன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. நாயகன், வில்லன் என தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வரும் மக்களுக்குப் பிடித்தமான அந்த நடிகர், இந்தப் படத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம். அடுத்தாண்டாவது இவர்கள் இணைந்து படம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என இவர்களது காம்போவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.