உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? |
மற்றொரு நடிகையைப் பார்த்து பிரபல நடிகை எடுத்த முடிவு புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகி விட்டது. பொதுவாகவே திருமணமாகி விட்டால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய் விடும். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கிலும் திருமணத்திற்குப் பிறகு பிஸியாக நடித்து வருகிறார் திருமணமான நடிகை. இவரைப் பார்த்து பிரபல நடிகை ஒருவர் தானும் இதே போல் திருமணத்திற்குப் பிறகும் நடிக்கலாம் என ஆசைப்பட்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கிறதாம். ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுத்தால், புதுப்படம் எதுவும் இல்லையாம். நடிகைக்கு படவாய்ப்புகள் குறைந்ததற்கு திருமணம் மட்டுமல்ல, அவர் அதிகமாகக் கேட்கும் சம்பளமும் தான் காரணம் என்கிறார்கள் திரைவட்டத்தில்.