'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரையில் புகழ் பெற்று மேயாதமான் படத்தில் சினிமாவுக்கு வந்தவரான பிரியா பவானி சங்கர், தற்போது கமல், லாரன்ஸ், அருண் விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். அதோடு தெலுங்கில் இவர் நடிக்கும் அகம் பிரமாஸ்மி என்ற படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது. இதனால் கூடிய சீக்கிரமே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விடுவார் பிரியா பவானி சங்கர்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ராஜ்வேல் என்பவரை காதலித்து வந்தார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலருடன் இருந்த ஒரு போட்டோவையும், இப்போதுள்ள ஒரு போட்டோவையும் பகிர்ந்து, ''2011, 2021. இந்த 10 ஆண்டுகளில் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். ஆனால் நமக்குள் உள்ள பிணைப்பு மட்டும் மாறவில்லை. எது நடந்தாலும் அது மாறாது. உனக்கு இந்த உலகத்தில் சிறந்த விஷயங்கள் கிடைக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.