பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக விளங்கியவர் சினேகா. அவரும், நடிகர் பிரசன்னாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். அருண் வைத்யநாதன் இயக்கிய 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலில் விழுந்தனர். 2012ம் ஆண்டு பிரசன்னா, சினேகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே 5 வயதில் விஹான் என்ற மகன் இருக்கிறான். கடந்த வருடம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ஆத்யாந்தா எனப் பெயரிட்டனர். இரு தினங்களுக்கு முன்பு குழந்தையின் முதல் பிறந்தநாளை பிரசன்னா, சினேகா தம்பதியினர் கொண்டாடினர்.
அந்தப் புகைப்படங்களை சினேகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.