‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பியார் பிரேம காதல் படத்தைத் தொடர்ந்து மாமனிதன், ஆலிஸ் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இதில் மாமனிதன் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது நிறுவனங்கள் குறித்து அவர் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பணம் மற்றும் ஒப்பந்தம் சம்பந்தமாக நான் யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அதனால் என்னை தவிர, என் பெயரிலோ அல்லது எனது ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பெயரிலோ யாராவது பணபரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ ஒப்பந்தம் போட்டுக்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை எனது நிறு வனங்களின் சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எதற்காக இப்படி ஒரு அறிக்கை என்பதற்கான காரணம் தெரியவில்லை.