ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் கடந்த வாரம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் கர்நாடகவிலும் இப்படம் தெலுங்கிலும் வெளியானது.
தெலுங்கில் சுமார் 9 கோடிக்கு விற்கப்பட்ட படம் 22 கோடி வரை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். இதர செலவுகள் போக படத்தின் நிகர வசூல் 13 கோடி. இதன் காரணமாக இதுவரையிலும் சுமார் 4 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரடித் தெலுங்குப் படங்களுக்குப் போட்டியாக இந்த அளவிற்கு 'மாஸ்டர்' தெலுங்கில் வசூலித்தது பெரிய விஷயம் என்கிறார்கள்.
இப்படத்தைத் தெலுங்கில் வெளியிட்ட மகேஷ் கொனேரு இன்று விஜய்யை சந்தித்து தெலுங்கு வசூல் நிலவரம் குறித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பு பற்றி மகேஷ் டுவிட்டரில், “எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக விஜய்யை சந்தித்து 'மாஸ்டர்' படத்தின் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்தேன். தெலுங்கு மாநிலங்களில் திரைப்பட ரசிகர்கள் அன்பு செலுத்தியதற்கு விஜய் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில் இனி விஜய்யின் படங்கள் மற்ற தமிழ் நடிகர்களை விடவும் பெரிய வியாபாரத்தை நோக்கிப் பயணிக்க 'மாஸ்டர்' வெற்றி உதவியுள்ளதாக கோலிவுட் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.