தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முதலாக நடித்துள்ள படம் ‛கூலி'. இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா குறித்து ரஜினி கூறுகையில், நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாக நடிக்கிறது என்று அஜித் வசனம் பேசியது போன்று, நாகார்ஜுனாவும் எவ்வளவு காலம் தான் நல்லவனாக நடிப்பது என்று இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசனே ஆச்சரியப்பட கூடிய அளவுக்கு நாகார்ஜுனா இந்த கூலி படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறினார் ரஜினி.
அதையடுத்து நாகார்ஜுனா பேசும்போது, ‛‛இந்த கூலி படம் ஏற்கனவே ரஜினி நடித்த பாட்ஷா படத்தை போன்ற 100 பாட்ஷாவுக்கு சமம். அவர்தான் எப்போதுமே ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்'' என்று பேசினார். அதையடுத்து இந்த கூலி படத்தில் நடித்திருக்கும் கன்னட நடிகர் உபேந்திரா பேசும் போது, ‛‛கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சான்டல்வுட் என அனைத்து சினிமாக்களிலும் பல ஸ்டார்கள் இருக்கிறார்கள். அவர்களை ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் ரஜினி படம் வந்தால் மட்டும் பேன்ஸ் மட்டுமின்றி ஸ்டார் நடிகர்களும் கூட பேன்ஸ் ஆகி விடுகிறோம். அப்படித்தான் ரஜினி நடித்துள்ள ஒவ்வொரு படங்கள் வரும் போதும் நாங்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கிறோம்'' என்று பேசினார் உபேந்திரா.