ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தவரான பாலிவுட் நடிகர் சோனு சூட், மும்பையில் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது கட்டடத்தை உரிய அனுமதி பெறாமல் ஹோட்டலாக மாற்றியது சம்பந்தமாக அவருக்கு மும்பை மாநகராட்சி கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதை எதிர்த்து மும்பை சிவில் நீதிமன்றத்தில் நடிகர் சோனு சூட் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து அந்த கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அவர் உரிய அனுமதி பெறாமலேயே குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
அதையடுத்து மாநகராட்சி தனக்கு எதிரான நடவடிக்கை எடுக்காமல் இருக்க, மும்பை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை விதிக்க மனு ஒன்றினை தாக்கல் செய்தார் சோனுசூட். இந்நிலையில், இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.