எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்தவர் சந்தானம். திடீரென நடித்தால் நாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்ற கொள்கை முடிவை எடுத்தார்.
அவர் நாயகனாக நடித்த முதல் படம் தோல்வியடைந்தாலும் அதன்பின் வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார். 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' அவருக்கு நாயகனாக முதல் வெற்றியைக் கொடுத்தது.
தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு 2, ஏ 1, டகால்டி' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. கடந்த வருடம் வெளிவந்த 'பிஸ்கோத்' சுமாரான வெற்றியைத்தான் கொடுத்தது.
தற்போது மேலும் சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'டிக்கிலோனா' படம் வெளியாக உள்ளது. அதற்குப் பிறகு 'சபாபதி, பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள் வெளியாகலாம்.
மேலும், சில வருடங்களுக்கு முன்பே முடிந்து வெளியாகாமல் இருக்கும் 'சர்வர் சுந்தரம்' படமும் இந்த வருடத்தில் வெளியாகலாம்.
அவர் நாயகனாக நடித்து வந்த 'மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான். மேலும், சில புதிய படங்களில் அடுத்தடுத்து அவர் நடிக்க ஒப்பந்தமாகலாம் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2021ம் ஆண்டில் சந்தானம் நாயகனாக நடிக்கும் நான்கைந்து படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.