திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் |

சிவா இயக்க, அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆசைப்பட்டார். மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாக இப்படத்திற்கான கதை விவாதம் கூட நடந்து முடிந்ததாகத் தகவல் வெளியானது.
சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரிடம் கூட பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொன்னார்கள். இதனிடையே, தற்போது நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்திற்குப் பிறகு 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கத் தயாராகிவிட்டார் சிரஞ்சீவி. இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது.
'வேதாளம்' ரீமேக்கை தள்ளி வைத்துவிட்டார் எனச் சொல்கிறார்கள். இப்படத்திற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டி உள்ளதால், கொரோனா தொற்று மிகவும் குறைந்த பிறகு இப்படத்தில் நடிக்கலாம் என அவர் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம்தான் சிரஞ்சீவி ரீ-என்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.