22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் கதையில் நடித்தார் பிரபாஸ். தற்போது ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வருகிறது. ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சமீபத்தில் சங்கராந்தி பண்டிகையை 'ராதே ஷ்யாம்' படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். பிரபாஸ். அப்போது மொத்த படக்குழுவினருக்கும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை பரிசளித்து அவர்களை மேலும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரபாஸ். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.