ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் கதையில் நடித்தார் பிரபாஸ். தற்போது ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வருகிறது. ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சமீபத்தில் சங்கராந்தி பண்டிகையை 'ராதே ஷ்யாம்' படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். பிரபாஸ். அப்போது மொத்த படக்குழுவினருக்கும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை பரிசளித்து அவர்களை மேலும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரபாஸ். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.




