ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நடிகனாக அறிமுகமானவர் தமன். தெலுங்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான கண்டசாலா பாலராமையாவின் பேரன் இவர். இசைக்குடும்பத்திலிருந்து வந்தவரான தமன் நடிக்கும் ஆர்வத்தை விட்டுவிட்டு இசையமைப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' தெலுங்குப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து தற்போது மிகவும் பிஸியாகிவிட்டார்.
தமிழில் தமன் இசையமைத்த 'ஈஸ்வரன்' படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் இசையமைத்த 'கிராக்' படம் பத்து நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் 'காப்பி' என்ற சர்ச்சை எழுந்தது. தமன் மீது பொதுவாகவே காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் அடிக்கடி எழும். அப்படியான விமர்சனங்களுக்கு கோபமாக பதிலடி கொடுத்துள்ளார் தமன்.
“சினிமா இசையில் பலரும் பங்கேற்பர். இயக்குனர்கள், பாடல் எழுதுபவர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து நாங்கள் வேலை பார்க்க வேண்டும். ஒரு டியூன் காப்பி என்றால் அது அவர்களுக்குத் தெரியாது. வேலையில்லாத மக்கள், இசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்தான் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இதுவரையில் என் மீது காப்பி அடித்தேன் என எந்த ஒரு காப்பி திருட்டு வழக்குகளும் இல்லை. அப்படியிருக்க என் மீது ஏன் இப்படி குற்றம் சாட்ட வேண்டும்,” எனக் கேட்டுள்ளார்.
'ஈஸ்வரன்' படப் பாடல்கள் எதுவும் காப்பி அடித்து உருவாக்கப்படவில்லை என்று நம்புவோமாக.