வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

முன்பெல்லாம் மலையாள சினிமாக்களுக்கு தமிழில் மார்க்கெட் அதிகம் கிடையாது. மலையாள படங்கள் தமிழில் டப் ஆகாது. சென்னை, கோவையில் சில தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும். ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்களின் வெற்றி காரணமாக, கொரோனா காலத்துக்குபின் மலையாள சினிமாக்கள் ஓடிடி மூலம் பிரபலம் ஆனதன் காரணமாக நிலவரம் மாறிவிட்டது.
பல மலையாள படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியிடப்படுகின்றன. சில சமயம் நேரடி மலையாள படங்களும் தமிழகத்தில் நிறைய தியேட்டர்களில் வருகின்றன. தமிழகத்தில் தனி வினியோகஸ்தர், ஏகப்பட்ட தியேட்டர் என மலையாள சினிமாவுக்கு தனி மார்க்கெட் உருவாகி விட்டது. அதனால், பல தமிழ் கலைஞர்களை பிஸினசை கருத்தில் கொண்டு மலையாள படங்களில் நடிக்க வைக்கிறார்கள். தமிழில் டப்பான பல மலையாள படங்களுக்கு டப்பிங் டைரக்டர் ஆக இருந்தவர் ஆர்.பி.பாலா. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் இயக்குநர் மற்றும் தமிழ் வசன எழுத்தாளர் ஆக 100க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார்.
சமீபகாலங்களில் வெளியான பரோஸ், ஜன கண மன, நேர், ஆடுஜீவிதம், மஞ்சும்மல் பாய்ஸ், வாழ, லூசிபர் 2 : எம்புரான், தொடரும், நரிவேட்டா மற்றும் சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்சனின் லோகா படங்களுக்கும் ஆர்.பி.பாலாதான் டப்பிங் டைரக்டராக இருந்து தமிழ்ப்படுத்தி இருக்கிறார். இப்போது சென்னையிலும் கூட பல மலையாள படங்களின் டப்பிங் நடக்கிறது. முன்னணி மலையாள நடிகர்கள் இங்கே வந்து தமிழ் பேசிவிட்டு போகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் புலிமுருகன், ஆர்டிஎக்ஸ், திரிஷ்யம், 2018, மாளிகை புரம், ஆவேசம், உள்ளொழுக்கு, குருவாயூர் அம்பலநடையில், நுணக்குழி, கிஷ்கிந்தா காண்டம் போன்ற பல மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டுள்ளன.




