ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குடும்பமாக பார்க்கலாம் என்ற கேரண்டி தரக்கூடிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இந்த இயக்குநரும், நடிகருமானவர். திடீரென இவர் பெரிய முதலாளி வீட்டிற்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் வெளியில் வந்ததால் தப்பித்துக் கொண்டார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவர், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் தமிழின் முன்னணி நாயகன் ஒருவரை இயக்குவதாக இருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவரது படத்தை இயக்குவார் எனப் பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப் போகும் நிலையில், இன்னமும் அந்தக் குறிப்பிட்ட படம் பற்றிய அப்டேட் வராமல் இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பட வேலைகள் தாமதம் ஆவதற்கு கொரோனா மட்டுமல்ல, நாயகன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. நாயகன், வில்லன் என தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வரும் மக்களுக்குப் பிடித்தமான அந்த நடிகர், இந்தப் படத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம். அடுத்தாண்டாவது இவர்கள் இணைந்து படம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என இவர்களது காம்போவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.