நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்களின் மூலம் நல்ல இயக்குனராக அறியப்பட்டவர் அமீர். எல்லா இயக்குனரையும் போன்றே அவருக்கும் நடிப்பு ஆசை வந்தது. யோகி என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். அந்த படம் நல்ல படமாக இருந்தபோதும் அது ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரியவந்ததால் படம் வரவேற்பை பெறவில்லை. வட சென்னை படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.
இந்த நிலையில் அமீர் கதையின் நாயகனாக நடித்துள்ள நாற்காலி என்ற படம் வெளிவர இருக்கிறது. மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார். முகவரி, காதல் சடு குடு, தொட்டி ஜெயாஉள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இது ஒரு அரசியல் படம்.
அமீருடன், 555 படத்தில் நடித்த சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக இந்த படத்திற்காக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" என்ற பாடலை பாடியிருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.