தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்களின் மூலம் நல்ல இயக்குனராக அறியப்பட்டவர் அமீர். எல்லா இயக்குனரையும் போன்றே அவருக்கும் நடிப்பு ஆசை வந்தது. யோகி என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். அந்த படம் நல்ல படமாக இருந்தபோதும் அது ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரியவந்ததால் படம் வரவேற்பை பெறவில்லை. வட சென்னை படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.
இந்த நிலையில் அமீர் கதையின் நாயகனாக நடித்துள்ள நாற்காலி என்ற படம் வெளிவர இருக்கிறது. மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார். முகவரி, காதல் சடு குடு, தொட்டி ஜெயாஉள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இது ஒரு அரசியல் படம்.
அமீருடன், 555 படத்தில் நடித்த சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக இந்த படத்திற்காக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" என்ற பாடலை பாடியிருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.