ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றது. மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுடன் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் நீதிமன்றம் தெரிவித்த உத்தரவின்படி கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுவாக, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கூடுதலாக அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதிகாலை 4 மணிக்கோ அல்லது 5 மணிக்கோ காட்சிகள் ஆரம்பமாகும். அதன்பின் 7 அல்லது 8 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடக்கும். படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி 6 காட்சிகள் வரை நடைபெறம்.
தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து கூடுதலாக நள்ளிரவு 1 மணி காட்சியை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அதனால், 'மாஸ்டர்' படம் வெளியாகும் 13ம் தேதியிலிருந்து 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 6 அல்லது 7 காட்சிகள் வரை நடைபெறலாம் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
பல ஊர்களில் நள்ளிரவு 1 மணி காட்சி மற்றும் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெறுதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




