இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றது. மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுடன் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் நீதிமன்றம் தெரிவித்த உத்தரவின்படி கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுவாக, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கூடுதலாக அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதிகாலை 4 மணிக்கோ அல்லது 5 மணிக்கோ காட்சிகள் ஆரம்பமாகும். அதன்பின் 7 அல்லது 8 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடக்கும். படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி 6 காட்சிகள் வரை நடைபெறம்.
தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து கூடுதலாக நள்ளிரவு 1 மணி காட்சியை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அதனால், 'மாஸ்டர்' படம் வெளியாகும் 13ம் தேதியிலிருந்து 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 6 அல்லது 7 காட்சிகள் வரை நடைபெறலாம் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
பல ஊர்களில் நள்ளிரவு 1 மணி காட்சி மற்றும் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெறுதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.