கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றது. மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுடன் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் நீதிமன்றம் தெரிவித்த உத்தரவின்படி கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுவாக, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கூடுதலாக அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதிகாலை 4 மணிக்கோ அல்லது 5 மணிக்கோ காட்சிகள் ஆரம்பமாகும். அதன்பின் 7 அல்லது 8 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடக்கும். படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி 6 காட்சிகள் வரை நடைபெறம்.
தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து கூடுதலாக நள்ளிரவு 1 மணி காட்சியை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அதனால், 'மாஸ்டர்' படம் வெளியாகும் 13ம் தேதியிலிருந்து 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 6 அல்லது 7 காட்சிகள் வரை நடைபெறலாம் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
பல ஊர்களில் நள்ளிரவு 1 மணி காட்சி மற்றும் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெறுதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.