இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா |
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி என எண்ணற்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, பாண்டிச்சேரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதற்கு முன்பு நடைபெற்றது. கொரானோ தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து அடிக்கடி முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள். இதற்காக படக்குழுவினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்களாம்.
அனைத்து நட்சத்திரங்களும் இன்று ஆரம்பமாகியுள்ள படப்பிடிப்பில் அடுத்தடுத்து கலந்து கொள்ள உள்ளார்களாம். சுமார் ஒரு மாத காலத்திற்கு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்த வருடத்திலேயே வெளியாகுமா என்பது முதல் பாகத்திற்கான படப்பிடிப்பை முடித்த பிறகுதான் தெரிய வரும்.